Contact Us

Name

Email *

Message *

Monday 1 July 2013

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 7

தற்போது உத்திராஞ்சலில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்கள் உள்ள பல இடங்கள் நிலச் சரிவாலும், பேய் மழையினாலும் சிதைந்த நிலைக்குப் போய் விட்டன. இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதி வழிபடும் பத்ரினாத் விஷ்ணு ஆலயம் மற்றும் கேதார்நாத் சிவன் ஆலயம் என்ற இரண்டுமே இன்று இடிபாடுகள் அடைந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு அங்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலைக்கு சென்று உள்ளது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும் என்றாலும் இந்த நேரத்தில் இந்த ஆலயங்களின் தல வரலாறு மற்றும் அவற்றின் மகிமைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள கர்வால் எனும் மலைப் பிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ளது பத்ரினாத் ஆலயம். மேலே உள்ள மலை பிரதேசத்தில் உள்ள இரண்டு ஆலயங்களும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், பத்ரிநாத் ஆலயத்தில் உள்ள சிலையை நிறுவியவர் ஆதி சங்கரர் என்றும், கேதார்நாத்தில் உள்ள சிவன் சிலை பாண்டவர்களால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டாலும்,திருமால் நர-நாராயணராக (அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக) இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர் லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச் செய்தார் என்ற புராணகள் கதையும் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களில் முதலில் பத்ரிநாத் மான்மியக் கதையைப் படிக்கலாம்.
பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 7

No comments:

Post a Comment