Contact Us

Name

Email *

Message *

Sunday 26 January 2014

நிம்மதி


நாம் எப்படியோ பூமியில் பிறந்து விட்டோம். நமக்குள் அழுக்கை (பாவங்களை) ஏற்றிக் கொள்ள இடம் கொடுத்து விட்டோம். இனியாவது அழுக்கை போக்குவதற்காக பயன்படுத்தி கொள்வோம்.

வாக்கு, மனம், உடல் என மூன்றாலும் பாவம் செய்து இருக்கிறோம். அவற்றைக் கொண்ட அந்தப் பாவத்தைப் புண்ணியத்தில் கரைத்து விட முயற்சிக்க வேண்டும்.

நாம் இந்த உலகை விட்டு ஒருநாள் போக வேண்டியது உறுதி. அதற்குள் பாவமூட்டையைத் தொலைத்து விட்டால் போதும் ஆனந்தம் கிடைத்து விடும்.

வெளியுலகப் பொருட்களால் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று நினைப்பது அறியாமை. மகிழ்ச்சியோ, நிம்மதியோ அவரவர் மனதைப் பொறுத்த விஷயங்களே.

No comments:

Post a Comment