Contact Us

Name

Email *

Message *

Tuesday 2 June 2015

Soundarya Lahari - Sloka: 13


Beneficial Results: 
காமஜயம் Victory in the matters of love
Power to attract women and cures impotency


नरं वर्षीयांसं नयनविरसं नर्मसु जडं
तवापाङ्गालोके पतित-मनुधावन्ति शतशः ।
गलद्वेणीबन्धाः कुचकलश-विस्त्रिस्त-सिचया
हटात् त्रुट्यत्काञ्यो विगलित-दुकूला युवतयः ॥ १३ ॥

கடைக்கண்ணின் க்ருபை [காமஜயம்]

நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம் 
தவாபாங்காலோகே பதித-மநுதாவந்தி சதச: |
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத் த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய: || 13 ||

தேவி! உன்கடைக்கண் பார்வையில் அகப்பட்டவன் கிழவனாகவோ, அல்லது பார்ப்பதற்கு குரூபியாகவோ அல்லது சக்தியற்றவனாகவோ இருந்தாலும் அழகிய யெளவனப் பெண்கள் வெட்கத்தை விட்டு அவனைப் பின் தொடரக்கூடிய வசிய சக்தியினை நீ அளிக்கிறாய். அதாவது அன்னையின் கடைக்கண் பார்வையே வசிய சக்தியினை ஏற்படுத்தக் கூடியதாம். இங்கு கூறப்பட்ட பெண்கள், சாதாரணமாக காமசவப்பட்டு அவனை பின் தொடருவதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. கீதையில் கிருஷ்ணன் சொன்னதை இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது ஸ்தீரிகளுள் நான், கீர்த்தி, செல்வம், வாக்தேவதை, ஞாபக சக்தி, திடசித்தம், பொறுமை ஆகிய சக்திகளாக இருப்பதாக கிருஷ்ணன் சொல்கிறான். எனவே மேலே யெளவன பெண்கள் என்று கூறுவது இந்தமாதிரியான யெளவன பெண்ணுருவம் கொண்ட சக்திகள் அவனை அடையும் என்றே கருத வேண்டும். மேலும், தேவியின் கடாக்ஷம் பெற்ற எவனும் காமேஸ்வர அம்ஸமுடையவனாகிறான். எனவே, கண்ணன் சொன்ன அந்த சக்திகள் தேவியின் கடைக்கண் பார்வை பெற்றவனை தேடி வந்து சேர்வதில் தவறொன்றும் இல்லை.

இதை பரமாச்சாரியார் சொல்லும் போது பின்வருமாறு சொல்கிறார். "ஸகல விஷயங்களிலும் நமக்குள்ள சித்த விகாரங்கள் எல்லாம் நிவிருத்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் கரும்பு வில்லையும், புஷ்பபாணங்களையும் அன்னை தன் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறாள். அவளது கடாக்ஷம் ஏற்படுமானால் எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் சக்தி, எந்த விதத்திலும் மோகம் ஏற்படாத நிலை உண்டாகிவிடும்".

அபாங்க-ஆலோகே - கடைக்கண் பார்வையில்; நரம் - மனிதன்;
வர்ஷியாம்ஸம் - வயதானவன்; நயனவிரஸம் - பார்க்க சகிக்காத;

ஜடம் - மூடன்; நர்மஸு - சிற்றின்ப விளையாட்டுக்கள்;
களத்-வேணீ-பந்தா: - கலைந்த கூந்தலுடைய பெண்கள்;
குசகலச-விஸ்ரஸ்த - மேலாடை விலகிட்டவர்களாக;
ஹடாத்-த்ருட்யத்-காஞ்ச்ய: - பரபரப்பில் ஒட்டியாண பூட்டுக்கள் கழல; சதச: - நூற்றுக்கணக்கானவர்கள்; அனுதாவதந்தி - பின் தொடர்கிறார்கள்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 15

naraṃ varṣīyāṃsaṃ nayanavirasaṃ narmasu jaḍaṃ
tavāpāṅgāloke patita-manudhāvanti śataśaḥ |
galadveṇībandhāḥ kucakalaśa-vistrista-sicayā
haṭāt truṭyatkāñyo vigalita-dukūlā yuvatayaḥ || 13 ||

With disheveled hair,
With upper cloths slipping from their busts,
With the lock of the golden belt getting open due to the haste,
And with saris slipping away from their shoulders,
Hundreds of young lasses,
Run after the men,
Who get your sidelong glance,
Even though they are very old,
Bad looking and not interested in love sports.



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment