Contact Us

Name

Email *

Message *

Monday 15 June 2015

Soundarya Lahari - Sloka: 14


Beneficial Results: 
பஞ்சம், கொள்ளைநோய் நிவ்ருத்தி Avoiding famine, dacoity and epidemic
Getting rid of bad and untoward factors


क्षितौ षट्पञ्चाशद्-द्विसमधिक-पञ्चाश-दुदके
हुतशे द्वाषष्टि-श्चतुरधिक-पञ्चाश-दनिले ।
दिवि द्विः षट् त्रिंशन् मनसि च चतुःषष्टिरिति ये
मयूखा-स्तेषा-मप्युपरि तव पादाम्बुज-युगम् ॥ १४ ॥

ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அதற்கு அப்பாலும் 
[பஞ்சம், கொள்ளைநோய் நிவ்ருத்தி]

க்ஷிதெள ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுதாஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ-தநிலே |
திவி த்வி: ஷட்த்ரிம்ஸந்-மநஸிச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் || 14 ||

தாயே, ப்ருதிவீ தத்துவமான மூலாதாரத்தில் 56 கிரணங்களும்,
ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52 கிரணங்களூம்,
அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62 கிரணங்களும்,
வாயு தத்துவமாகிய அநாஹதத்தில் 54 கிரணங்களும்,
ஆகாச தத்துவமாகிய விசுத்தி சக்கரத்தில் 72 கிரணங்களும்,
மனஸ் தத்துவமாகிய ஆஜ்ஞா சக்கரத்தில் 64 கிரணங்களும்
இருப்பதாக (யோக) சாஸ்திரம் சொல்கிறது. இந்த சக்கரங்களுக்கு/கிரணங்களுக்கு மேலே உள்ள ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றது.

ஆறு ஆதாரங்களும் காலகதிக்கு உட்பட்டது என்பதும், அற்றிற்கு மேலே விளங்கும் தேவியின் திருவடிகள் காலத்தை கடந்தவை என்பதும் இங்கு குறிப்பால் உணர்த்தப்படுகிறது. இதில், மூலாதாரம் என்பது 56 நாட்களைக் கொண்ட வஸந்த ருதுவாகவும், மணிபூரகம் 52 நாட்களைக் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்களைக் கொண்ட வர்ஷ ருதுவாகவும், அனாகதம் 54 நாட்களைக் கொண்ட சரத் ருதுவாகவும், விசுத்தி 72 நாட்களைக் கொண்ட ஹேமந்தருதுவுக்கு ஒப்பாகவும், ஆஜ்ஞை 64 நாட்கள் கொண்ட சிசிர ருதுவுக்கு ஒப்பாகவும் சொல்லப்படுகிறது. ப்ரம்மாண்டத்தில் நாட்களாக இருப்பது பிண்டாண்டத்தில் கிரணங்களாக சொல்லப்படுகிறது.

க்ஷட்பஞ்சாசத் - ஐம்பத்தாறு, த்விஸமதிக-பஞ்சாசத் - ஐம்பத்திரண்டு; த்வாஷஷ்டி: - அறுபத்திரண்டு; சதுரதிக-பஞ்சாசத் - ஐம்பத்து நான்கு; த்வி: ஷட்த்ரிம்சத் - எழுபத்திரண்டு; சதுஷ் ஷஷ்டி: - அறுபத்து நான்கு; பாதாம்புஜம் - திருவடிகள்; தேஷாம் அபி - எல்லாவற்றுக்கும் மேலாக; மயூகா: - கிரணங்கள்;

க்ஷிதெள - பூமியைக் குறிக்கும் மூலாதாரம்; உதகே - ஜலத்தை குறிக்கும் மணிபூரகம்; ஹுதாசே - அக்னி ரூபமான ஸ்வாதிஷ்டானம்; அனிலெ (தநிலே) - வாயுதத்துவத்தை குறிக்கும் அனாஹதம்; த்வி - ஆகாச தத்துவத்தை உள்ளடக்கிய விசுக்தி; மனஸி ச - மனஸுடன் சம்பந்தமுடைய ஆக்ஞை;

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • தத்வாதிகா 
  • தத்வமயீ 
  • ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா

kṣitau ṣaṭpañcāśad-dvisamadhika-pañcāśa-dudake
hutaśe dvāṣaṣṭi-ścaturadhika-pañcāśa-danile |
divi dviḥ ṣaṭ triṃśan manasi ca catuḥṣaṣṭiriti ye
mayūkhā-steṣā-mapyupari tava pādāmbuja-yugam || 14 ||

Your two holy feet are far above,
The fifty six rays of the essence of earth of Mooladhara,
The fifty two rays of the essence of water of Mani pooraka,
The sixty two rays of the essence of fire of Swadhishtana,
The fifty four rays of the essence of air of Anahatha,
The seventy two rays of the essence of ether of Visuddhi,
And the sixty four rays of the essence of mind of Agna chakra.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:14, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.898-903 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment