Contact Us

Name

Email *

Message *

Sunday 7 August 2016

Atmarpanastuti - Sloka 33


एतावन्तं भ्रमणनिचयं प्रापितोऽयं वराकः
श्रान्तः स्वामिन्नगतिरधुना मोचनीयस्त्वयाहम् ।
कृत्याकृत्यव्यपगतमतिर्दीनशाखामृगोऽयं
संताड्यैनं दशनविवृतिं पश्यतस्ते फलं किम् ॥ ३३॥

ஏதாவந்தம் ப்ரமண நிசயம் ப்ராபிதோயம் வராக:
ச்ராந்தஸ் ஸ்வாமின்ன கதிரதுனா மோசநீயஸ்த்வயாஹம் |
க்ருத்யாக்ருத்யவ்யபகத மதிர் தீனசாகாம்ருகோயம்
ஸந்தாட்யைநம் தசன விவ்ருதிம் பச்யதஸ்தே பலம் கிம் || 33 || 

ஒரு குரங்காட்டி தன்னால் பழக்கப்பட்ட குரங்கை வீடுதோறும் கொண்டுபோய் ஆங்காங்கு அதைப் பற்பல விதமாய் ஆட்டிவைக்கிறான். அவ்விதம் அலைந்து திரிந்து கிலேசப்பட்ட அக்குரங்கு தன் களைப்பின் மிகுதியைப் பொறுக்க மாட்டாமல் மிகவும் பரிதாபமாகப் பல்லையிளிக்கிறது. அவ்விதம் இளிப்பது இனி என்னை விட்டுவிடமாட்டாயா? என்பது போல் தோன்றுகிறது. சஞ்சல ஸ்வபாவமுள்ளவனாதலாலும் அறிவீனனாதலாலும் ஜீவன் அக்குரங்கிற்குச் சமானமாகிறான்.

இவன் கோடிக்கணக்கான கர்ப்பவாஸத்தை அடைகிறான். காலனின் தண்டத்தாலடிக்கப்பட்டுப் பல்லை இளிக்கிறான். ஜன்மந்தோறும் தனது நன்மையை அறிந்து கொள்ளாமல் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து இடைவிடாது கிலேசங்களை அனுபவிக்கிறான். இப்படி இந்தக் குரங்கை ஆட்டிவைப்பதில் ஈசனுக்கு யாது பயன்? குரங்காட்டி போல அவர் பிச்சை எடுத்து ஜீவனம் செய்பவரா? அல்லது குறும்புள்ள பையனைப் போல குரங்கைத் துன்புறுத்தி வேடிக்கை பார்ப்பவரா? இந்தக் குரங்கு படும் அவஸ்தையையும் அது மிகப் பரிதாபமாய்ப் பல்லிளிப்பதையும் பார்த்து தயவு ஏற்பட்டு ஸர்வேச்வரன் இதை அவிழ்த்து விடக்கூடாதா?

etAvantaM bhramaNanichayaM prApito&yaM varAkaH
shrAntaH svAminnagatiradhunA mochanIyastvayAham |
kRutyAkRutyavyapagatamatirdInashAkhAmRugo&yaM
saMtADyainaM dashanavivRutiM pashyataste phalaM kim || 33 ||

This miserable one has been subjected to wandering (through innumerable births) so long. I am tired and without any means of escape, O Lord. Now I should be released by You. What do You gain by beating this miserable monkey who does not know what should and what should not be done and seeing him baring his teeth? 



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment