Contact Us

Name

Email *

Message *

Friday 16 September 2016

Soundarya Lahari - Sloka: 45


Beneficial Results: 
முக்காலத்தையும் உணர
Eloquence, foretelling the future, blessings of the eight Goddesses of wealth.


अरालैः स्वाभाव्यादलिकलभसश्रीभिरलकैः
परीतं ते वक्त्रं परिहसति पङ्केरुहरुचिम् ।
दरस्मेरे यस्मिन् दशनरुचिकिञ्जल्करुचिरे
सुगन्धौ माद्यन्ति स्मरदहनचक्षुर्मधुलिहः ॥ ४५॥

தேவியின் முகத்தாமரையில் மொய்க்கும் சிறு வண்டுகள் 

அராளை: ஸ்வாபாவ்யாத் அளிகளப ஸஸ்ரீபிரளகை: 
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம் |
தரஸ்மேரே யஸ்மிந் தசநருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தெள மாத்யந்தி ஸ்மரதஹந சக்ஷுர் மதுலிஹ: || 45 ||

தாயே, இயற்கையாகவே சுருண்ட முடியால் சூழப்பட்ட உனது நெற்றியானது, வண்டுகளால் சூழப்பட்ட தாமரை மலரை தோற்கடிப்பதாக இருக்கிறது. அந்த முகத்தில் தவழும் உனது புன்சிரிப்பினால், பல்வரிசைகளின் மூலமான காந்தியை பிரதிபலிக்கும் இதழ்கள், மற்றும் பரிமளமுடைய அந்த முகாரவிந்தத்தால் காமனை வென்ற பரமசிவனின் கண்களான தேனிக்கள் மயங்கியிருக்கின்றன. மன்மதனை எரித்த பரமசிவனது கண்கள், இப்போது அம்பிகையின் முக லாவண்யத்தினால் காமவிகாரத்தை அடைந்ததாம்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் முகம் தாமரைப் புஷ்பமாகவும், அவளது முன்னுச்சியில் இருக்கும் சுருண்ட முடியானது தாமரையை மொய்க்கும் வண்டுகளாகவும் சொல்கிறார். அம்பிகையின் சிரிப்பினால் வெளிப்படும் பல்வரிசை மூலம் வெளிவரும் காந்தியுடன் கூடிய அந்த முகத்தைக் கண்ட பரமசிவன் மயங்கிவிடுகிறார். பரமசிவனைச் சொல்லும் போது, என்னதான் காமனை ஜெயித்தவரானாலும் அன்னையின் முகலாவண்யத்தின் முன் மயங்கி விடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்வபாயாத் - இயற்கையாகவே; அராளை - சுருட்டையான; ப்ரீதம் - சூழப்பட்ட; அளகை - முன்னுச்சி மையிர்கள்; அளிகளப - சிறு வண்டுகள்; ஸஸ்ரீபி: - காந்தியுடைய; தே வக்த்ரம் - உன் முகமானது; தரஸ்மேரே - புன்சிரிப்புடன் கூடியது; தசனருசி - பல் வரிசைகளுடைய; கிஞ்ஜல்க - இதழ்களால்; ஸுகந்தெள - நல்ல மணமுள்ள; யஸ்மிந் - முகத்தில்; ஸ்மரதஹந - மன்மதனை எரித்த; சக்ஷுர் மதுலிஹ: - கண்களான தேனீக்கள்; மாத்யந்தி - மயங்குகின்ற

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 58

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா 
  • ஸுமுகீ நலிநீ ஸுப்ரூ : சோபநா ஸுரநாயிகா
  • சுத்த வித்யாங்குராகார 
  • த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா
  • தரஸ்மேரமுகாம்புஜா
  • சம்புமோஹிநீ

arālai svābhāvyā-dalikalabha-saśrībhi ralakaiḥ
parītaṃ te vaktraṃ parihasati paṅkeruharucim |
darasmere yasmin daśanaruci kiñjalka-rucire
sugandhau mādyanti smaradahana cakṣu-rmadhulihaḥ || 45 ||

By nature slightly curled,
And shining like the young honey bees
Your golden thread like hairs,
Surround your golden face.
Your face makes fun of the beauty of the lotus.
And adorned with slightly parted smile,
Showing the tiers of your teeth,
Which are like the white tendrils,
And which are sweetly scented.
Bewitches the eyes of God,
Who burnt the god of love.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment