Contact Us

Name

Email *

Message *

Sunday 23 July 2017

Soundarya Lahari - Sloka: 66


Beneficial Results: 
ஸங்கீத ஞானம் Wisdom in music
Cure of minor ailments, gets skill in vocal and instrumental music.


विपञ्च्या गायन्ती विविधमपदानं पशुपतेः 
त्वयारब्धे वक्तुं चलितशिरसा साधुवचने । 
तदीयैर्माधुर्यैरपलपिततन्त्रीकलरवां 
निजां वीणां वाणी निचुलयति चोलेन निभृतम् ॥ ६६॥


தேவியின் குரல் வீணையினும் இனியது [இன்சொல்; ஸங்கீத ஞானம்]

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதாநம் பசுபதேஸ்
வயாரப்தே வக்தும் சலிதசிரஸ ஸாது-வசனே |
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதாம் || 66 ||

அம்மா, உன்னுடைய பதியான பரமசிவனது லீலா வினோதங்களை சரஸ்வதி வீணையில் பாடிக் கொண்டிருக்கும்போது அதனைக் கேட்டு சந்தோஷமடைந்து அதைப் பாராட்டுகையில், உனது குரலினிமையானது சரஸ்வதியின் யாழிசையைப்பழிக்கும் அளவு இனிமையாக இருந்ததால், சரஸ்வதி வெட்கமடைந்து தனது யாழை உறையிட்டு வெளியே தெரியாதபடி மூடிவிடுகிறாள்.

அம்பிகையின் குரலானது வாக்தேவதையின் வீணையிசையை விட இனிமையானது என்கிறார் பகவத்பாதர். தீந்தமிழிலும் 'யாழைப் பழித்த மொழியாள்' என்று அன்னையைப் போற்றும் பெயர் இருப்பதைக் காணலாம். அன்னைக்கு தனது பதியின்லீலைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் என்பதை 64ம் ஸ்லோகத்தில் பார்த்தோம். இதனை அறிந்த சரஸ்வதி தேவி ஈசனது லீலைகளான த்ரிபுரசம்ஹாரம், தக்ஷயாக த்வம்ஸனம், ஹாலாஹல தாரணம், கஜாசுர வதம் போன்றவற்றை தனதுவீணையிசையில் பாடியதாகச் சொல்லியிருக்கிறார்.

சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் "கச்சபீ" என்பது. சஹஸ்ரநாமத்தில், 'நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்த்ஸித கச்சபீ' என்னும் நாமமும் கச்சபீ விணையின் நாதத்தை தோற்கடிக்கும் குரலினிமை உடையவள் என்றே சொல்கிறது.

பசுபதே: - பரமசிவனுடைய; விவிதம் அபதாநம் - நானாவிதமான லீலைகளை; விபஞ்ச்யா - வீணையால்; காயந்தீ - பாடிக் கொண்டிருக்கும்; வாணீ - சரஸ்வதி தேவி; சலித சிரஸா - மகிழ்ச்சியில் தலையசைத்த; த்வயா - உன்னால்ஸாது வசநே - ஏற்க்கும்படியான வார்த்தைகளை; லக்தும் ஆராப்தே - சொல்ல ஆரம்பிக்கும் போது; ததீயை: மாதுர்யை வாக்கின் இனிமையில்; அபலபித தந்த்ரீஇ கலரவாம் - பரிஹாஸம் ப்ண்ணப்பட்ட தந்திகளுடைய ஸ்வரத்தோடு கூடிய ;நிஜாம் வீணாம் - தன்னுடைய வீணையை; சோளேந - உறையில்; நிப்ருதம் - வெளியில் தெரியாது மறைத்து; நிசுளயதி - மூடி விடுதல்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 70, 86

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • நிஜஸல்லாப  மாதுர்ய  விநிர்ப்பர்த்ஸித  கச்சபீ
  • காவ்யாலாப   விமோதிநீ
  • காநலோலுபா
  • ஸாமகாநப்ரியா

vipañcyā gāyantī vividha-mapadānaṃ paśupate-
stvayārabdhe vaktuṃ calitaśirasā sādhuvacane |
tadīyai-rmādhuryai-rapalapita-tantrīkalaravāṃ
nijāṃ vīṇāṃ vāṇīṃ niculayati colena nibhṛtam || 66 ||

Oh mother of all,.
When you start nodding your head,
Muttering sweetly, “good,good”,
To the Goddess Saraswathi,
When she sings the great stories to you,
Of Pasupathi our lord,
With the accompaniment of her Veena,
She mutes the Veena by the covering cloth,
So that the strings throwing sweetest music,
Are not put to shame,
By your voice full of sweetness.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:66 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1211 -1217 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment