Contact Us

Name

Email *

Message *

Tuesday 5 September 2017

Soundarya Lahari - Sloka: 69


Beneficial Results: 
ஸங்கீத ஞானம் Mastery over music
Success in all endeavors, in case of women longevity of husbands, skill in music.
Excellent sloka for instrumental as well as vocal musicians. Command over the three octaves in music, gains expertise in "gamakas" and musical technique. Gains vast musical repertoire. Ideal for performing artisites, capacity to produce magnetic, melodious and celestial music. Accumulation of neck ornaments.


गले रेखास्तिस्रो गतिगमकगीतैकनिपुणे 
विवाहव्यानद्धप्रगुणगुणसंख्याप्रतिभुवः । 
विराजन्ते नानाविधमधुररागाकरभुवां 
त्रयाणां ग्रामाणां स्थितिनियमसीमान इव ते ॥ ६९॥

கழுத்தில் பிரகாஸிக்கும் 3 ரேகைகள் [ஸங்கீத ஞானம்]

கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ: |
விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவதே || 69 |

ஸங்கீதத்தில் இருக்கும் கதி, கமகம் மற்றும் கீதத்தில் நிபுணியான தாயே!, உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகளானது உன்னைப் பரமசிவன் விவாஹம் செய்து கொண்டபோது அவரால் கட்டப்பட்ட கண்ட ஸுத்ரத்தின் அடையாளம் போலும். உனது கண்டத்திலிருந்து வரும் ஸங்கீதத்திற்கு ஆதாரமான மூன்று ஸ்ருதிகளுடைய லக்ஷ்ணங்களை காட்டும் எல்லையைப் போன்று விளங்குகிறது.

இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் கழுத்தில் இருக்கும் மூன்று வரிகளை வர்ணித்திருக்கிறார் ஆசார்யார். விவாஹ காலத்தில் மாங்கல்ய தாரணம் என்று சொல்லப்படும் திருமாங்கல்யக் கயிறானது முப்பிரிகளால் ஆனது. அன்னையின் கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் பரமசிவன் கட்டிய மாங்கல்யத்தைச் சுட்டுவதாக இருக்கிறது என்கிறார். ஸாமுத்ரிகா லக்ஷணத்தின்படி உத்தம ஸ்த்ரீ மற்றும் புருஷர்களுடைய நெற்றி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மூன்று கோடுகள்/ரேகைகள் இருக்குமாம். அந்த த்ரிவளீ எனப்படும் ரேகைகள் அம்பாளுடையகழுத்தில் ஸ்திரமாக இருந்து அன்னையின் குரலிசையில் பிறக்கும் ஸங்கீத சாஸ்திரத்தின் ஆதாரமான க்ராமங்களின் எல்லைகளை காட்டுகிறது என்கிறார். ஸங்கீத ஸ்வரங்களைத் தொகுப்பதில் அவைகளை ஷ்ட்ஜ, மத்யம, மற்றும் காந்தாரக் க்ரமங்களாகச் சொல்கிறார்கள். இதில் முதல் இரண்டு க்ராமங்கள் தான் தற்போது பிரயோகத்தில் இருப்பது, மூன்றாவது தேவலோகத்தைல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாச் சொல்லப்படுகிறது. இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது.

கதி-கமக-கீதைக நிபுணே - ஸங்கீதத்தில் ப்ரதான்யமான கதி, கமகம் மற்றும் கீதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவளே; தே களே - உன் கழுத்திலுள்ள; திஸ்ரோ ரேகா - மூன்று மடிப்புகள்/வரிகள்; விவாஹ வ்யாநத்த ப்ரகுண - விவாஹத்தில் கட்டப்பட்ட சரடான ஸுத்த்ரத்தின்;குண ஸங்க்யா ப்ரதி புவ: - சரடுகளின் எண்ணிக்கையை நினைவுபடுத்தும்; நாநாவித - பலவிதமான; மதுர ராகாகர புவாம் - இனிமையான ராகங்களுக்கு உற்பத்தியிடமாகிற; த்ரயாணாம் க்ரமாணாம் - ஷட்ஜம மத்யம, காந்தாரம் என்கிற மூன்று க்ரமங்களுக்கு; ஸ்திதி நியம ஸீமாந இவ- இயற்கை, பாகுபாடு இவற்றுக்கான எல்லைகள் போல; விராஜந்தே - விளங்குகின்றது.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 70

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர 
  • சோபித கந்தரா 
  • காநலோலுபா
  • மஹாகாமேச மஹிஷீ

gale rekhāstisro gati gamaka gītaika nipuṇe
vivāha-vyānaddha-praguṇaguṇa-saṅkhyā pratibhuvaḥ |
virājante nānāvidha-madhura-rāgākara-bhuvāṃ
trayāṇāṃ grāmāṇāṃ sthiti-niyama-sīmāna iva te || 69 ||

She who is an expert in Gathi, Gamaka and Geetha,
The three lucky lines on your neck,
Perhaps remind one,
Of the number of the well tied manifold thread,
Tied during your marriage,
And also remind of the place,
In your pretty neck,
Where originates the three musical notes,
Of Shadja, Madhyama and Gandhara,

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:69 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment