Contact Us

Name

Email *

Message *

Friday 3 November 2017

Soundarya Lahari - Sloka: 73



Beneficial Results: 
ஜீவன் முக்தி Liberation, peace and contentment.
Increased flow of milk in females and in cows, power to realise Brahman.


अमू ते वक्षोजावमृतरसमाणिक्यकुतुपौ
न संदेहस्पन्दो नगपतिपताके मनसि नः ।
पिबन्तौ तौ यस्मादविदितवधूसङ्गरसिकौ
कुमारावद्यापि द्विरदवदनक्रौञ्चदलनौ ॥ ७३॥

என்றென்றும் பாலராக்கும் ஏற்றமிகு ஞானப்பால் [ஜீவன் முக்தி]

அமூ தே வக்ஷோஜெள் அம்ருதரஸ மாணிக்ய குதுபெள
ந ஸந்தேஹ ஸ்பந்தெள நகபதிபதாகே மநஸி ந: |
பிபந்தெள தெள யஸ்மத் அவிதித வதூஸங்க ரஸிகெள
குமாரெள அத்யாபி த்விரதவதந க்ரெளஞ்சதலநெள || 73 ||

அம்மா, உன்னுடைய மார்பிலிருப்பது பால் நிறைந்த ஸ்தனங்களல்ல, அவை, அம்ருதம் நிறம்பிய மாணிக்கக் குடுவைகள் என்பதில் லவலேசமும் சந்தேகமில்லை. பாலுடைய ஸ்தனங்களானால் அதைப் பருகிய கணபதி மற்றும் ஸ்கந்தன் ஆகிய இருவரும்பால்யம் தாண்டி யெளவனம் போன்ற வளர்ச்சிகளை அடைந்திருப்பார்கள். அவர்களிருவரும் வளர்ந்து ஸ்த்ரீ சங்கமம் தெரியாத குழந்தைகளாக, யானை முகத்துடனும், பர்வதத்தைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களுடன் இருக்கின்றனர். இதன் காரணமாகவே உனது ஸ்தனங்களில் பாலுக்குப் பதிலாக அம்ருத ரஸம் நிறைந்ததாகக்கூறுகிறோம்.

மனிதர்கள் போன்று அன்னை பராசக்தியின் ஸ்தனங்களில் தாய்ப் பால் இருந்திருந்தால் அதனை உண்ட கணபதி மற்றும் ஸ்கந்தன் மனிதர்கள் போன்று வளர்ந்து யெளவன இச்சைகள் உடையவராக இருந்திருப்பர். ஆனால் அவர்கள் சிறு பிள்ளைகளாக, யானை முகமூடி கொண்டும், பர்வதம்/மலையைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் அவர்கள் சிறு-குழந்தைகளாகவே தோன்றுகின்றனர். இதன் காரணத்தை ஊன்றிப் பார்த்தால் உன்னுடைய ஸ்தனங்களில் அவர்கள் அருந்தியது அம்ருதமாக இருப்பதே காரணம் என்று புலனாகிறது என்கிறார் பகவத்பாதர். அம்ருதம் உண்டவர்களுக்கு வயதால் ஏற்படும் மூப்பு கிடையாது என்று சொல்லப்படும்.

அமூ தே வக்ஷோஜெள - உன்னுடைய ஸ்தனங்கள்; அம்ருதரஸ மாணிக்ய குதுபெள - அம்ருத ரஸம் நிறம்பிய மாணிக்கத்தாலான குடுவைகள்; ந மநஸி - எங்கள் மனதில்; ந ஸந்தேஹ ஸ்பந்த: - ஸம்சயம் லவலேசமும்/சிறிதும் இல்லை; யஸ்மாத் - ஏனென்றால்; தெள பிபந்தெள - அவைகளை பானம் செய்கின்ற; த்விரத வதந க்ரெளஞ்ச தலநெள - கஜானனனும், க்ரெளஞ்சத்தைப் பிளந்த குமரனும்; அத்யாபி - இன்னமும்; அவிதித வதூஸங்க ரஸிகெள - ஸ்த்ரீ ஸங்கமத்தின் ரஸம் தெரியாத; குமாரெள - குழந்தைகளாக இருப்பது.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 53, 21

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • வயோவஸ்தா  விவர்ஜிதா

amū te vakṣojā-vamṛtarasa-māṇikya kutupau
na sandehaspando nagapati patāke manasi naḥ |
pibantau tau yasmā davidita vadhūsaṅga rasikau
kumārāvadyāpi dviradavadana-krauñcdalanau || 73 ||

Oh, Victory flag of the king of mountains,
We never have any doubt in our mind,
That your two breasts divine,
Are the nectar filled pot made of rubies,
For The elephant faced one,
And he who killed Crownchasura,
Even today do not know the pleasure of women,
And remain as young children.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:73 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment