Contact Us

Name

Email *

Message *

Sunday 3 December 2017

Soundarya Lahari - Sloka: 75


Beneficial Results: 
கவி பாடும் திறமை Gift of poesy. Good memory and attention.
Beneficial for composers, poets and for creative work. Great fame and recognition.


तव स्तन्यं मन्ये धरणिधरकन्ये हृदयतः
पयःपारावारः परिवहति सारस्वतमिव ।
दयावत्या दत्तं द्रविडशिशुरास्वाद्य तव यत्
कवीनां प्रौढानामजनि कमनीयः कवयिता ॥ ७५॥

பாலெனப் பெருகும் பாரதியின் வடிவம் [கவி பாடும் திறமை]

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா || 75 ||

அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!.

பால் வெண்மையாக இருப்பதால் அதற்கு ஸரஸ்வதி சம்பந்தமென்றும், மதுரமாக/இனிமையாக இருப்பதால் அம்ருதத்துடன் சம்பந்தமும் சொல்லப்பட்டிருக்கிறது. த்ராவிட தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அம்பிகையின் ஸ்தன்யத்தின் பானத்தால் ஸரஸ்வதீ கடாக்ஷம் ஏற்பட்டு எல்லோருடனும் கொண்டாடப்படும் அளவில் மிகப் பெரிய கவிஞன் ஆனான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்ட த்ராவிட சிசு யார் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. சங்கரர் தம்மைத் தானே அப்படிக் கூறியுள்ளார் என்று சிலரும், இன்னும் சிலர் திருஞான சம்பந்தரைச் சொல்லியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள்,தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது திருஞான சம்பந்தர் என்றால் அவரதுகாலத்திற்குப் பிறகு சங்கரர் காலம் என்றாகிறது. இதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இது பற்றி சங்கர விஜயங்களிலும் ஏதும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு காலகட்டத்தில் செளந்தர்ய லஹரிக்கு பாஷ்யம் எழுதிய பலரும் பலவிதகேள்விகளை எழுப்பி அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனியாக மதுரையம்பதியில் இடுவதாக இருக்கிறேன்.

தரணிதரகந்யே - பார்வதி தேவியே; தவ ஸ்தந்யம் - உன் ஸ்தனங்களில்; ஹ்ருதயத: ஹ்ருதயத்திலிருந்து உண்டான; பய: பாராவார: க்ஷீர ஸமுத்ரம் போன்ற; ஸாரஸ்வதமிவ - ஸரஸ்வதீ மயமான; பரிவஹதி - பெருகுகின்றது; மந்யே - நினைக்கிறேன்;யத் - ஏனெனில்; தயாவத்யா - கருணையுடன் கூடிய உன்னால்; தத்தம் - கொடுக்கப்பட்ட; தவ (ஸ்தந்யம்) - உன்னுடைய பாலை; த்ரவிட சிசு: த்ராவிட தேசத்துக் குழந்தை; ஆஸ்வாத்ய - சாப்பிட்டு; ப்ரெளடானாம் கவீனாம் - பிரசித்தி பெற்ற கவிகளுக்கிணையாக; கமநீய: கவயிதா- அழகிய கவிதைகளைச் செய்பவனாக; அஜநி: - ஆகியிருக்கிறான்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 9

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  •  ஸுதாஸாராபி  வர்ஷிணீ 
  • வாக்வாதிநீ
  • வாகதீச்வரீ
  • வ்யாஹ்ருதி:
  • ஸுதாஸ்ருதி:

tava stanyaṃ manye dharaṇidharakanye hṛdayataḥ
payaḥ pārāvāraḥ parivahati sārasvatamiva |
dayāvatyā dattaṃ draviḍaśiśu-rāsvādya tava yat
kavīnāṃ prauḍhānā majani kamanīyaḥ kavayitā || 75 ||

I feel in my mind,
That the milk that flows from your breast,
Is really the goddess of learning, Sarswathi,
In the form of a tidal wave of nectar.
For , milk given by you ,who is full of mercy,
Made the child of Dravida,
The king among those great poets,
Whose works stole one’s mind.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:75 from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1243-1248 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment